கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அநுராதபுரம் மஸ்ஜித் தீவைப்பு

அநுராதபுரம் நகரில் மல்வத்து ஒழுங்கையில் அமைந்துள்ள தக்கியா மஸ்ஜித் ஒன்று இன்று அதிகாலை தீமூட்டப்பட்டுள்ளது. ஐம்பது பேர் வரை தொழுகை நிறைவேற்றக் கூடியதாக அமைக்கப்பட்டிருந்த நீண்ட காலமாக இயங்கிவரும் குறித்த -தக்கியா -மஸ்ஜித்தே தீமூட்டப்பட்டுள்ளது.

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. மூட்டப் பட்ட தீயினால் மஸ்ஜித்தின் ‘சீட்’ கூரைகள், (ஐந்து கூரைகள் ) மின்விசிறி ஆகியவற்றுடன் தடுப்பு மறைப்புகளும் எரிந்து அழிந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
 
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் தலைவர் , மற்றும் செயலாளர்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முயன்றபோதும் அவர்களின் கைத்தொலைபேசிகள் தொடர்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாள் சம்பவம் தொடர்பில் ஜம்இயதுல் உலமாவின் நடவடிக்கைகளை அறிய முடியவில்லை .
 
குறித்த பிரதேசத்தில் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது . நேற்று வெள்ளிக் கிழமை நாட்டின் பல பகுதிகளில் பெளத்த அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் பங்களாதேசில் பெளத்த விகாரை தீ வைத்து எரிக்கப்பட்டமைக்காக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது .

0 comments:

Post a Comment