கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

களைகட்டும் கஹட்டோவிடாவின் ஈகைத் திருநாள்

“தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!”

புனித நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் வழமை போன்று கஹட்டோவிடாவில் இம்முறையும் களை கட்டியுள்ளது என்றால் மிகையாகாது. சர்வதேசப் பிறை, உள்ளுர் பிறை என்ற எவ்விதச் சர்ச்சைகளுமின்றி அனைவரும் ஒன்றாக பெருநாள் கொண்டாடும் இந்நிகழ்வு பலரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

வழமைபோன்று தஃவாப் பள்ளியில் பெருநாள் தொழுகை காலை 7 மணிக்கு அல் பத்ரியா மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன.
அதேபோன்று தரீக்காப் பள்ளி வாசல்களிலும் காலை 7.30இற்கு தொழுகை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.


இவ்வாறே கஹட்டோவிட சார்லங்காவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலிலும் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து பெருநாள் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

0 comments:

Post a Comment