கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

குரானை எரிக்க மாட்டோம்- பாதிரியார்

 
திட்டம் கைவிடப்பட்டது - பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ்
திட்டம் கைவிடப்பட்டது - பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ்

அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்று ஒன்பது ஆண்டுகள் இன்றோடு நிறைவடைந்துள்ள நிலையில், இரட்டை கோபுரங்கள் இருந்த இடமான கிரவுண்ட் ஜீரோ அருகே இஸ்லாமிய நிலையம் ஒன்று கட்டப்படும் என்று திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குரானை எரிக்கப் போவதாக கூறியிருந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அத்திட்டம் முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் குறிப்பிடப்படும் அந்த இஸ்லாமிய நிலையத்தின் மத போதகரான அப்துல் ராஃப், அமைதி வேண்டும் என்று உண்மையாக நினைப்பவர்களிடம் தான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் பாதிரியார் டெர்ரி ஜோன்ஸை சந்திக்கும் திட்டம் எதுவும் தனக்கு இப்போது இல்லை என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக குரானை எரிக்கப் போவதாக பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறியதை தொடர்ந்து முஸ்லிம் நாடுகளில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்க பாதுகாப்புதுறை செயலர், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ உள்ளிட்டவர்கள் திட்டத்தை கைவிடுமாறு டெர்ரி ஜோன்ஸை கேட்டு கொண்டிருந்தனர்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்ற மதத்தவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

0 comments:

Post a Comment