கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ள மஸ்ஜித் திறக்கப்பட்டது

இன்று காலையில் பள்ளியில் சுன்னத்தான தொழுகைகள் இடம்பெற்றுள்ளது. மஸ்ஜித் திறக்கப்பட்டுள்ளது நேற்று மஸ்ஜித் தாக்கப்பட்ட பின்னர் மஸ்ஜித் பூட்டப்பட்டு அதிகாரிகளினால் மீள் ஒழுங்கு படுத்தப் பட்டு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது இன்று இன்ஷா அல்லாஹ் லுகர் தொழுகை ஜமாத்துடன் இடம்பெறும் என்று lankamuslim.org க்கு மஸ்ஜிதின்  நிர்வாகி மற்றும் மௌலவி ஆகியோர் தெரிவித்தனர்

அமைச்சர்கள் குழு விஜயம்



அவர்கள் எமக்கு சற்று முன்னர் வழங்கிய தகவலில் : மஸ்ஜிதுக்கு வைக்கபட்டிருந்த சீல் இன்று அதிகாலை பொலிசாரினால் நீக்கப்பட்ட நிலையில் காலை 7:00 மணியளவில் ரிஷாத் பதியுதீன் , அமைச்சர் பௌசி ஆகியோருடன் பாராளுமன்ற உறுபினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற பள்ளிக்கு வந்து பள்ளியை திறந்து தந்துள்ளனர்.


பள்ளியின் வெளிபகுதியில் வந்த அமைச்சர்கள் குழு நிலைமைகளை கேட்டு அறிந்துள்ளதுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது அதில் அமைச்சர்கள் AGA-DS- , தம்புள்ள போலீஸ் மா அதிபர் மற்றும் மஸ்ஜிதுக்கு அருகில் உள்ள சிங்கள மக்களும் ஆகியோர் கலந்து கொண்டனர் .இதன்போது சிங்கள மக்கள் பள்ளியின் பழமை பற்றி அங்கு கருத்துகளை தெரிவித்தனர்.


பிந்திக் கிடைத்த தகவல்: பிரதியமிச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ் தலைமயில் குழுவொன்று தற்போது மஸ்ஜிதுக்கு சென்று நிலைமைகளை ஆராந்து வருகிறது இன்று லுகர் தொழுகையில் MLAM ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவருடன் சென்றுள்ள அரசியல்வாதிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தம்புள்ள மஸ்ஜிதின் செயலாளர் lankamuslim.org க்கு சற்று முன்னர் தெரிவித்தார்.


மஸ்ஜித் தொடர்பான கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது அது 23 ஆம் திகதியா அல்லது எப்போது என்று எமக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்










0 comments:

Post a Comment