கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று திங்கட்கிழமை வரலாற்று முக்கியத்துவமிக்க தினம்.




63 வருட வரலாற்றை கொண்ட தம்புள்ள பள்ளிவாசல் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட வேண்டுமென பிரதமர் டீ.எம். ஜயரட்ணா வியுறுத்தியுள்ள அதேவேளை மறுபுறம் திங்கட்கிழமை, 23 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கிடையில் பள்ளிவாசல் அகற்றப்படாவிட்டால் அதனை இடித்து தரைமட்டமாக்குவோமென தீவிரவாத பௌத்த தேரர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
 தம்புள்ள பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் முஸ்லிம்கள் தரப்பில் எவரும் பங்குகொள்வதில்லை என்ற தீர்மானத்தையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மேற்கொண்டுள்ளது.
 ஆகமொத்தத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று திங்கட்கிழமை மிகமுக்கியத்துவமிக்க நாளாக அமையப்போகிறது.
 இலங்கை அரசாங்கத்திடம் அல்லாஹ்வின் இல்லத்தை பாதுகாத்துத் தருமாறு நமது முஸ்லிம் உறவுகள் விடுத்த வேண்டுகோளுக்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை. முஸ்லிம் அரசியல் வாதிகள் மேற்கொண்ட பயன்களுக்கு இதுவரை சாதக முடிவுகள் கிடைக்கவில்லை.
 இந்நிலையில் முஸ்லிம்களுக்கு  எஞ்சியிருப்பது துஆ (பிரார்த்தனை) மாத்திரமே ஆகும். தம்புள்ளயில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லம் பாதுகாக்கப்பட வேண்டுமென முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திப்போம்..!!

0 comments:

Post a Comment