கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வவுனியா பள்ளிவாசலில் இரு தரப்பினரிடையே முறுகல்; பொலிஸார் குவிப்பு .

வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று பிற்பகல் இரு சாராருக்கிடையில் இடம்பெற்ற முறுகல் நிலையினால் குழப்பமான சூழல் வவுனியா நகர்ப்பகுதியில் ஏற்பட்டது.


வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற இருந்த நிலையில் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினை சேர்ந்தோர் இதில் பங்கு பற்றியிருந்தனர். இதன்போது புதிய நிர்வாகிகள் தெரிவது தொடர்பிலான வாக்கெடுப்பு முறையில் ஏற்பட்ட குழப்பமான சூழலே இம்முரண்பாட்டுக்கு காரணம் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் ஒரு அங்கத்தவர் ஒரு வாக்கே அளிக்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. இருப்பினும், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணி;ப்பாளரினால் ஒருவர் 15 வாக்குகள் அளிக்கலாம் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பணிப்பாளரின் இந்த தீர்மானத்துக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.வி.அருணகிரிநாதன் ஊடாக புதிய நிர்வாகத்தெரிவை நிறுத்த அனுமதி கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஆராய்ந்த வவுனியா நீதிவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ் ராஜா, எதிர்வரும் 14ஆம் திகதிவரை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகத்தெரிவுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன் பின்னரே வவுனியா பள்ளிவாசலில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணக்களத்தினை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் அவர்கள் வவுனியா பொலிஸில் முறைப்பாட்டினையும் செய்துள்ளனர். இந்நிலையில் வவுனியா பொரிய பள்ளிவாசலின் முன்னாள் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, பள்ளிவாசலின் தற்போதைய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு கதைத்தபோது பள்ளிவாசலில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் பள்ளியுடன் தொடர்பில்லாத வேறு பிரதேசத்தவர்களே முரண்பட்டுக் கொண்டனர் எனவும் தெரிவித்தனர்.

எனினும் இது தொடர்பில் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் தொடர்புகொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை




tamil mirror website:

0 comments:

Post a Comment