கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பேஷன் பக் மீது பேரினவாதிகளின் தாக்குதல்

FB Attack


முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் நிறுவனங்கள் மீதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விஷமப்பிரச்சாரம் மற்றும் விஷம நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ஒரு காடையர் கூட்டம் இன்று பேஷன் பக் நிறுவனத்தின் பெப்பிலியான களஞ்சிய சாலை மீது தாக்குதல் நடாத்தியது.
பொலிசாரின் தகவல்படி ஆரம்பத்தில்  குறைந்தது 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்த தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தாக்குதல் காரணமாக களஞ்சிய கட்டடம் ஏனைய சொத்துக்கள் மற்றும் ஒரு வாகனம் என்பன சேதத்துக்கு உள்ளானது.
இந்த சிறிய கூட்டம் சிறிது சிறிதாக ஒரு பெரிய கூட்டமாக மாறி தாக்குதலை உக்கிரப்படுத்தியது. பல மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் களஞ்சிய சாலை கற்கள் மற்றும் ஏனைய பொருட்கள் கொண்டு தாக்கப்பட்டது. இந்த தாக்குதலை கட்டுப்படுத்த பொலிசாரால் முடியவில்லை.
பின்னர் இராணுவம், விஷேட அதிரடிப்படை மற்றும் கலகமடக்கும் போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சம்பவ இடத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் சிலரும் இந்த காடையர் கூட்டத்தால் தாக்கப்பட்டனர்.
பொது பல சேனா அமைப்பு ஊடகவியலாளர்களுக்கு தமது முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க கோரி குறுந்தகவல் அனுப்பிய சில நாட்களின் பின்னரே இந்த சம்பவம் நிகழ்ந்தமை இங்கு குறிப்பிட தக்கது.
இந்த குறுந்தகவல் பிரச்சாரத்தில் சிங்கள பொது மக்கள் தமது புத்தாண்டு கொள்வனவுகளை சிங்கள வியாபார நிலையங்களில் மாத்திரம் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப் பட்டிருந்தனர்.
இந்த ஆண்டு முற்பகுதியில் சிங்கள ராவய எனும் இனவாத அமைப்பு மகாராகமையில் அமைந்துள்ள நோ லிமிட் விற்பனை நிலையத்தின் முன் முஸ்லிம்களால் நடத்தப்படும் இந்த வியாபார நிலையம் மூடப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நிகழ்த்தி இருந்தனர்.
நேற்று போலீசார் குறுந்தகவல் ஊடாக இனவாதம் மற்றும் மத விடயங்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். இது சம்பந்தமாக ஒரு பௌத்த மதத்தவரும் ஒரு முஸ்லிம் நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் இந்த தாக்குதல் சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இன முறுகல்களை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனினும் பொலிசாரின் இந்த அறிக்கையில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய வழி முறைகளில் இன முறுகலை ஏற்படுத்துவோர் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. முற்று முழுதாக குறுந்தகவல் பரிமாற்றம் சம்பந்தமாக மாத்திரமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையம் தாக்கப்படுவதற்கு முன்னர் அதற்கு முன்னுள்ள விகாரையில் மணி அணித்து மக்களை ஒன்றுகூட்டி பெசன்பெக்கை தாக்கினார்கள் என ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது
 
பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புகள் அண்மைக்காலமாக முஸ்லிம் நம்பிக்கைகளுக்கு எதிராக பகிரங்கமான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது யாவரும் அறிந்ததே.
பேரினவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர்
பேரினவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர்


 FB Attack 5 
 FB Attack 4 
 FB Attack 3

0 comments:

Post a Comment