கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜம்ய்யதுல் உமலாவின் முடிவுகளை மதிப்பதே நமது தற்போதைய தேவையாகும். -மௌலவி அர்கம்-




நாட்டின் இன்றைய நிலவரங்களைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும் இச்சூழ்நிலையில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்தவும் கடந்த 02.03.2013 சனியன்று கஹட்டோவிட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் ஒரு உரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வுரையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மத்திய செயற்குழு உறுப்பனரும் தென்ஆபிரக்கா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் சரீஆத்துறையல் கல்வி கற்றவருமாகிய மௌலவி அர்கம் அவர்கள் நிக்ழ்த்தினார்.

நாட்டில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக முடக்கி விடப்பட்டிருக்கும் சதித்திட்டங்கள் இஸ்லாத்திற்கு ஒன்றும் புதிய விடயமல்ல என்றும் அன்றைய ஸஹாபாக்கள் காலம் தொட்டு இந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் எம்மவர்களிற்கு மத்தியில் உள்ள பிளவுகள் இஸ்லாத்தின் எதிரிகளான இவர்களுக்கு வாய்ப்புக்களாக அமைவதாகவும் இயக்கங்களிற்கு இடையிலான பொறாமை உணர்வுகளும் போட்டிகளும் ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தைக் காட்டிக் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளமையும் எமது எதிரிகளுக்கு தமது சதித்திட்டங்களை அரங்கேற்ற ஏதுவாகின என்றும் தெரிவித்தார்.

மேலும் எமக்கிடையில் ஏற்படும் மார்க்க ரீதியான பிரச்சினைகளை பொலிஸாரிடம் எடுத்துச்சென்று மார்க்கத்தை அவர்கள் கீழ்த்தரமாக பேசும் நிலைமைகளை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டிக் கொண்டார். இவ்வாறான கருத்து வேறுபாடுகள் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை இரு தரப்பு உலமாக்களையும் கொண்டு நமக்குள்ளே பேசித்தீர்ப்பதே காலத்தின் தேவை என்பதையும் வழியுறுத்தியதுடன் இயக்கங்கள் விட்டுக்கொடுப்புடனும் சகிப்புத்தண்மையுடனும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எந்த ஒரு இயக்கமும் தீவிரத்துடன் நடந்துகொள்வதை தவிர்ந்து கொள்ளல் வேணடும் என்றும் கூறினார்.

மேலும் தற்போது இலங்கை முஸ்லிம் உம்மத் ஜம்இய்யதுல் உலாவுடன் கைகோர்த்து அவர்களிற்கு உதவி செய்வதே இப்பிரச்சினைகளை வெற்றிகரமாக முகங்கொடுக்க ஏதுவாக இருக்கும் என்றும் கூறினார். ஜம்இய்யதுல் உலமாவுடன் உள்ள கருத்து முரண்பாடுகளைக் களைந்துவிட்டு நமது பொது எதிரியை ஒன்றாக எதிர்த்து வெற்றிபெற முன்வரவேண்டும் என்று அவர் அழைப்புவிடுத்தார்.

காலத்திற்கு ஏற்ற ஒரு உரையை ஏற்பாடு செய்த நூர் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மேலும் இந்நிகழ்வுக்கு இணைப்பாக இருந்த ஜம்இய்யாவின் ஹலால் பிரிவின் செயலாளர் மௌலவி முர்சித் மௌலவி அவர்களுக்கும் அல்லாஹ் நற்பாக்கியங்களை நல்குவானாக!

0 comments:

Post a Comment