கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றம் : இலங்கைக்கு எதிராக வாக்களித்தது இந்தியா






இலங்கைக்கு எதிரான தீர்மானம் 25-13 என மேலதிக வாக்குகளால் ஐ.நா மனித உரிமை பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 
அமெரிக்க பிரேரணை மீதான ஐ.நா உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்பு சற்று முன்னர் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் நடைபெற்று முடிந்தது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது. இதேவேளை பாகிஸ்தான் இதை கடுமையாக எதிர்த்துள்ளதுடன் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.

ஐ.நாவுக்கான இந்திய தூதுவர் திலீப் இன்கா இவ்வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பு கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் எல்.எல்.ஆர்.சி அறிக்கையின் பரிந்துரைகளை தொடர்ந்து கண்டிப்பாக இலங்கை அமல்படுத்த வேண்டும் எனவும், 13வது சட்டதீர்திருத்தத்தை நோக்கி நகரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் காணாமல் போவோர், தடுத்து வைக்கப்பட்டிருப்போர், தனியார் காணிகள் அபகரிக்கப்படுதல் தொடர்பிலும் இலங்கை முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இலங்கையுடனான இந்தியாவின் நெருங்கிய நட்புறவு 1000 வருடங்களுக்கு மேல் நீடிக்கின்ற போதும், இலங்கையில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் பாராமுகமாக இந்தியாவால் இருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.  ஐ.நா மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சர்லாந்து, பிரேசில் ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி மற்றும் சியெரா லியோன் ஆகியனவும் இலங்கைக்கு எதிராகவும், பிரேரணைக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. வெனிசுலா இலங்கை தொடர்பிலான பிரேரணையை கடுமையாக எதிர்த்துள்ளதுடன், இத்தீர்மானம் பாசாங்குத்தனமான போலியான தீர்மானம் எனவும் குற்றம் சுமத்தியது.




விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி இந்த தீர்மானம் ஏற்க முடியாது என்று கூறினார். சர்வேதச பரிந்துரைகள் இந்த தீர்மானத்தில் இதில் இல்லை என்றும், இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதனால் தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என்று அவர் கூறினார்.

இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை கருத்து தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிரான இத்தீர்மானத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், சிவில் யுத்தங்களை எதிர்கொண்ட பல நாடுகள் இருக்க இலங்கைக்கு எதிராக மட்டும் இவ்வளவு ஆவேசம் காட்டுவது ஏன்  எனவும் கேள்வி எழுப்பினார்.

தாய்லாந்து இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது. கொரிய குடியரசு தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

இதை தொடர்ந்து அமெரிக்க தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  தீர்மானத்திற்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தன. 13 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன. 08 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. இதையடுத்து 12 மேலதிக வாக்குகளினால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் ஐ.நா மனித உரிமை சபையில் நிறைவேற்றம் கண்டுள்ளது.

0 comments:

Post a Comment