கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லிம்களை மறந்து பிக்குகளுக்காக போராடும் அஸ்வர் ஹாஜி




ஒரு முஸ்லிமின் திறந்த மடல் - -மூதூர் ரஸ்மி-

நேற்று நீங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழ் நாட்டில் புத்த பிக்குகள் தாக்குதலுக்கு உள்ளாவதாக பேசினீர்கள் இதனை ஐநா வரைக்கும் கொண்டு செல்லவேண்டும் என்றும் சொன்னீர்கள், இதனைகேட்டவுடன் எனது மனசு மிகவும் கஷ்டப்பட்டது. காரணம் எமது முஸ்லிம் மக்கள் அண்மைக்காலமாக இந்த புத்த பிக்குகளால் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளபட்டுள்ளனர் இன்றைக்கு நாம் இலங்கையில் எமது இருப்பே கேள்விக்குறிகுள்ளான நிலையில் உள்ளோம்.

பள்ளிகள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் பெண்கள் மீதான தாக்குதல்கள், எமது மதத்தை கேவலபடுத்தும் பேச்சுக்கள், முஸ்லிம் வியாபாரஸ்தலமீதன தாக்குதல் இப்படி பலவற்றை அடுக்கி கொண்டே போகலாம். இதை எல்லாம் யார் செய்கின்றனர்? இந்த காவியுடை அணிந்த புத்த பிக்குகளே.

இது உங்களுக்கும் நன்றாக தெரியும் நீங்கள் இவர்களுக்காக வக்காலத்து வாங்கியதை நான் குறை கூற வரவில்லை, பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். ஆனால் நான் இங்கு கூறவந்தது என்னவென்றால் நீங்கள் இவர்களின் பிரச்சினையை ஐநா வரை கொண்டு செல்ல இருக்கிறீர்கள் பாரட்டதக்கது ஆனால், எமது முஸ்லிம்கள் மீது இந்த நாட்டு பொது பாலா சேனா நடாத்திய ஆர்பாட்டங்கள் தாக்குதல்களை நீங்கள் எமது பாராளுமன்றத்தில் கூட ஒரு வார்த்தை பேசியது இல்லையே இது மிகவும் தூரதிஷ்டமானது.

நேற்றைய உங்கள் உரையை கேட்டவுடன் நான் மிகவும் கவலைப்பட்டேன். எம் சமூகத்திற்கு இந்த புத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனத்தை மறந்து இவர்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள் எமது மொத்த முஸ்லிம் சமூகத்திற்காக வாய் மூடி மௌனியாக இருப்பது எந்த வகையில் நியாயம்?

இது நீங்கள் எமது சமுதாயத்துக்கும் இஸ்லாத்திற்கும் செய்யும் துரோகமாகும்.

நீங்கள் எவர்களுக்காக பரிந்து பேசினீர்களோ அவர்கள் இன்று சொல்லுகிறார்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய தவ்ஹீத் ஜமாத்தினாராம். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல இருக்கின்றீர்கள்? இந்திய தவ்ஹீத் ஜமாத்தினரை கண்டித்து ஐநா வரை செல்ல இருக்கின்றீர்கள? எதிர்காலத்தில் இப்படியம் செய்வீர்கள். என்ன மானம் கேட்ட பிழைப்பு இது?

நீங்கள் இப்படி எல்லாம் பேசும்போது நான் நினைக்கறேன், அதாவது, நான் மக்களால் இந்த பாரளுமன்றத்துக்கு வரவில்லை நான் வந்தது ஜனாதிபதியால்தான் அதானால நான் எதுக்கு உங்களுக்காக குரல் கொடுக்கணும் ? ஜனாதிபதிக்கும் அவரின் குடும்பத்திற்கும் அவரின் மதத்திற்கும் மட்டும்தான் பரிந்து பேசுவேன்.. இப்படிதான் உங்கள் நடைமுறை இருக்கின்றது.

பதவியோ அல்லது அந்தஸ்தோ இந்த உலகில் நிரந்தரம் இல்லை, நாம் செய்யும் நல்ல அமலும் நல்ல செயலும்தான் மறுவுலகில் வெற்றியை கொடுக்கும். அதனை மறந்து நீங்கள் உங்கள் மனம் போன போக்கில் பேசி எம்மை வேதனை படுத்துகின்றீர்கள். இதனை நாங்கள் அண்மைக்காலமாக பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

அல்லாஹ் உங்களுக்கு நல்ல எமானை கொடுப்பானாக. ஆமின்…

0 comments:

Post a Comment