மக்கள் தீர்ப்பு இன்று, அல்பத்ரியா ம.வி. வாக்குச் சாவடியில் வாக்களிப்பு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
எட்டாவது பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் வாக்களிப்பில் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தலில் 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் 225 உறுப்பினர்கள் எட்டாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். நாடு முழுவதும் 12,314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் சார்பாக 3,653 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 2498 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வந்தன.
கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் 1637537 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 18 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 252 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 336 வேட்பாளர்களுமாக 588 பேர் தேர்தல் களமிறங்கியுள்ளனர்.
எமது ஊர் வாக்காளர்களின் கருத்துப்படி கஹடோவிடாவில் ஐ.தே.மு க்கும் ம.வி.மு க்கும் வாக்குச் சேகரிப்பதில் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது. பெறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment