கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பாதை புணரமைப்புக்கு கிடைத்த கஹடோவிட மக்களின் மெச்சத்தகுந்த பங்களிப்பு

தற்போது நடைபெற்றுவரும் கஹடோவிட பிரதான பாதைக்கு ”காபட்” இடும் பணிகளுக்கு எமதூர் மக்களிடமிருந்து மெச்சத்தகுந்த பாரிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பதையை விரிவாக்குவதற்கு பலர் தங்களது மதிகளையும், சொந்த வீட்டின் சில பகுதிகளை உடைத்து பெருந்தண்மையுடன் ஒத்துழைத்தமை பாராட்டத்தக்கது.
அதே போன்று பாதை சிறப்பாக அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு எமது ஊர் மக்களுக்காக பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் பலரது வாய்ச்சாடல்களுக்கு, ஏச்சுப் பேச்சுக்களுக்கு மத்தியில் இந்த வேலை சிறப்பாக முடியவேண்டும் என்பதற்காக களத்தில் நிற்கும் ஊா் நலன் விரும்பிகள் அனைவருக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்  இவர்களின் இம்மகத்தான ஒத்துழைப்புக்கு நட்கூலியை வழங்குவானாக!

மேலும் இந்த பாதைப் புணரமைப்ப வேலைக்காக உடைக்கப்பட்டுகின்ற மதில்கள், வீடுகளை திருத்திக் கொடுப்பதற்காக ஊர் மக்கள் ஒன்றினைந்து நிதிசேகரிப்பில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.  இந்நிதிக்காக எமது ஊரைச் சேர்ந்த பல தனவந்தர்களின் பங்களிப்பை கிடைத்ததாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கிறது.  குறிப்பிட்டுக் கூறுவதென்றால் எமது ஊரைச் சோ்ந்த தனவந்தர்களுல் ஒருவர் இந் நிதிக்காக சுமார் ஒரு இலச்சம் ரூபாவை கொடுத்தள்ளாா்.

இந்த பணிசிறப்பாக நடைபெற்று முடிய எல்லாம் வல்ல இறைவனிடம் நாமும் பிராத்திக்கின்றோம்.





0 comments:

Post a Comment