கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வேன் முச்சக்கரவண்டியுடன் விபத்து நால்வர் பலி (கலகெடிஹென திகாரிய)



கலகெடிஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்குபேர் பலியானதுடன் ஏழுபோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திஹாரி, கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இச் சம்பவத்தில் மாலிகாவத்தையைச் சேர்ந்த 2 முஸ்லிம் சகோதரிகளும் ஒரு கைக்குழந்தையும், கத்தோலிக்க பாதரியார் ஓருவரும் பலியாகியுள்ளனர். உயிரிழந்த இருபெண்களும் விடுமுறையில் இருந்த தாங்களது பிள்ளைகளை கல்ளெளிய பெண்கள் அரபுக் கல்லூரியில் சேர்த்துவிட்டு வீடு திரும்புகின்ற வழியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
இவ்விபத்தில் உயிரிழந்த பெற்றோர்களின் சடலங்கள் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுகும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment