கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதும், அருகிலுள்ள முஸ்லிம் வீடுகள் மீதும் தாக்குதல் | இதுவரை 45 பேர் படுகாயம்

 

கிரண்ட்பாஸ் - சுவர்ணசிட்டி வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது  காடையர் கூட்டமொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. மஹ்ரிப் தொழுகை நேரத்திலேயே இந்த தாக்குதலை காடையர் கூட்டமொன்று மேற்கொண்டுள்ளது. அருகிலுள்ள சில முஸ்லிம் வீடுகளும் இதன்போது தாக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கிரான்ட்பாஸ் பள்ளிவாயல் மீது காடையர்கள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த 45 பேரில் தற்பொழுதுவரை 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனவும் மற்ற மூவரும் பள்ளிவாயலில் தொழுதுகொண்டிருந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

பள்ளிவாயல் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதனால் ஊடகவியலாளர்கள் எவருக்கும் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இப்பிரதேசத்தில் தற்போது பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத் தப்பட்டிருப்பதாகவும் மக்கள் வீடுகளின் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 comments:

Post a Comment