கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லீம்களின் சோகத்தீயில் குளிர்காய்ந்த எமது ஊர் அரசியல் புள்ளிகள்.



அன்மையில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் எமது ஊரைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டமை கஹடோவிடா மக்களும் எமது நாட்டில் நடக்கின்ற முஸ்லிம் விரோத செயல்களுக்கு ஆதரவு வழங்குகின்றதா என்று என்னத் தோன்றுகின்றது.

அன்மையில் எமது நாட்டின் அரசியல் நிலவரங்கள் முஸ்லிங்களை நாட்டைவிட்டே விரட்டியடிக்கும் திட்டமிடல்களுடன் செயற்பட்டுக்கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. முஸ்லிங்களால் மிகவும் மதிக்கப்படும் அல்லாஹ்வுடைய இல்லமாம்  பள்ளிவாசல்கள் பல இடங்களில்  தாக்கப்பட்டுள்ளது (தம்புள்ள, குருநாகல், கொளும்பு, ...) கடந்த வாரம் மகியங்கனை ஜும்ஆ மஸ்ஜிதை  எமது கண் முன்னாலயே எந்தவித கேள்விகளும் இல்லாமல் இலகுவாக அகற்றிவிட்டார்கள்.   இந்த பயங்கரவாத நடவடிக்கைகளொடு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவர எவ்வித் நடவடிக்கையும் எடுக்காத கீழ்தரமான இந்த அரசாங்கத்தை பலப்படுத்த எமது ஊர் அரசியல்வாதிகள் முயற்சி மேற்கொள்கிறார்களா????

முஸ்லிம் சமூகம் அபிவிருத்தியை மாத்திரம் வேண்டிநிக்கும் ஒரு சமூகமல்ல என்பதை இவர்கள் அறிந்துகொள்ளட்டும்.

 
Canadian Muslim, Tamil and civil groups condemn religious intolerance in Sri Lanka























 

5 comments:

ஸலீம் said...

ரமழான் மாதத்தில் பெற்ற தக்வா இந்த மகிந்த சகோதரர்களுடைய இப்தாரோடு ஒற்றி உரவாடுவதன் மூலம் இந்த கேடுகெட்ட அரசியல் எமது ஊர் அரசியல் வாதிகளின் விஜயத்துடன் கஹடோவிடா மக்களும் நாட்டில் முஸ்லிங்களுக்கு எதிரான வன்முறையை அதரிப்பவர்களுக்கு உருதுனைபொல் காட்டிக்கொடுத்துவிட்டார்கள்.

yasir said...

இந்த அரசியல் சாக்கடையனுகள் அடுத்தமுறை மகிந்த மாமாவுக்கு ஓட்டுக்கேட்டு எங்கட ஊருபக்கம் வரட்டும் நாம் யார் என்பதை அடுத்த இலக்சனில் காட்டுவோம்.

ஊரான் said...

எமதூரைச் சேர்ந்த அரசியல் சாக்கடையனுகளுக்கு மொதல்ல அறிவு இருக்கணுமே! ஆனா எழுத்துக்கூட தெரியாத கைனாட்டுக்களாச்சே இந்த மோட்டு மொக்குக் கூட்டம்.

fareed-thihariya said...

முஸ்லிம்கள் இன்று பெரும் துன்பத்தை அனுபவித்து வரும் நிலையில் உண்மையான சமூக உணர்வு இருக்குமானால் இந்த இப்தார் நிகழ்வை பகிஷ்கரிக்க வேண்டும்.

Anonymous said...

inda naaihala kollonum, petisukkum kanjukkum emanda kahatowita da muslimkalin manatha vittittanuhal

Post a Comment