கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மைத்திரியை ஆதரிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை மாலை கஹடோவிட்ட முற்சந்தியில்.

ஜனாதிபதி வேற்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரக்கூட்டம் ஒன்று கஹடோவிடா சந்தியில் நாளை மாலை இடம்பெற எற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  இந்த கூட்டத்தில் பெரும்திரளான மக்கள் கலந்துகொள்ளவிருப்பதாகவும் அதன் காரணமாக  நாளை மாலை எமது சந்தியை ஊடருத்துச் செல்லும் 185 இலக்க பஸ்போக்குவருத்து அத்தனகல்ல ஊடாக திசைதிருப்பப்பட இருப்பதாகவும் ஆங்காங்கே மக்கள் கதைப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

இப்பிரச்சாரக் கூட்டத்தில்
முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க,
பாராளுமன்ர உறுப்பினா் அரஜுன ரணதுங்க,
பாராளுமன்ர உறுப்பினா் ஹுனைஸ் பாரூக்,
பாராளுமன்ர உறுப்பினா் சுஜீவ சேனஸிங்க,
ஹிருனிகா பிரேமசந்திர,
ஹரிசன ராஜகருன,
நஜாமுகம்மத்...
மேலே சொல்லப்பட்ட பிரமுகா்களின் வருகை உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும்.
அஸாத் ஸாலி, ரோசிசேனானாயக்க, இமதியாஸ் பாகிர் மாக்கார் போன்றவர்களின் வருகைக்கான ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருப்பதாகவும் அறியக்கிடைத்துள்ளது. மேலும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  இக்கூட்டம் சம்பந்தமான மேலதிக தகவல்கள் எமக்கு கிடைக்கிமிடத்து நாம் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

0 comments:

Post a Comment