கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

உயிர்த்துடிப்புள்ள மரணம்: சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் உடல் நல்லடக்கம் மிக எளிமையாக நடைபெற்றது.

நேற்று வரை அரசாண்ட மன்னர்...
இன்று ஆறடி மண்ணுக்குள்...
சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் உடல் நல்லடக்கம்
மிக எளிமையாக நடைபெற்றது.
ரியாதில் உள்ள இமாம் துர்க்கி பின்
அப்துல்லாஹ் ஜும்ஆ பள்ளிவாசலில்
ஜனாசா தொழுகை நடைபெற்றது.
அதற்குப் பிறகு அல்ஈத் மண்ணறையில்
மன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
நம்ம ஊரில் ஒரு சாதாரண முனிசிபாலிடி
உறுப்பினர் இறந்து போனால்கூட..
எத்தனை வகைப் பூக்கள்...என்னென்ன அலங்காரம்..
எத்தனை எத்தனை கொட்டுமேளம்...தாரை...தப்பட்டை..

வேட்டுச் சத்தம்...லுங்கியை மடித்துக்
கட்டிக்கொண்டு குத்தாட்டம்...
ஒரு நாட்டையே ஆண்ட மன்னரின் மரணம்...
எந்த ஆரவாரமும் இல்லை...
அன்றாட வாழ்வில் உண்பது போல்..
உறங்குவது போல்.. உழைப்பதுபோல்..
மரணமும் இயல்பான ஒன்றுதான் என்னும்
இஸ்லாமிய வழிமுறையை அந்த நாட்டு
அரசும் மக்களும் பின்பற்றி உலகிற்கே
ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளனர்.
அடக்கத்தலத்தைப் பாருங்கள்..எத்துணை எளிமை...
அடடா....இறப்பு கூட
எத்துணை உயிர்த்துடிப்போடு விளங்குகிறது..!
இந்திய மக்களுக்கு இதில் ஏராளமான
படிப்பினைகள் உண்டு.

-சிராஜுல்ஹஸன்

0 comments:

Post a Comment