கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிம்களை மக்கள் நிராகரித்து விட்டார்களா....?



எகிப்திலிருந்து ஹபிபுல்லா பைஸ்

முஹம்மத் முர்ஸி-24.9%
அஹமத் சபீக்-24.5%

இவர்களில் "முஹம்மத் முர்சி" இஸ்லாமிய எண்ணம் கொண்ட இஹ்வானிய ஜனாதிபதி வேட்பாளராகவும் , "அஹ்மத் சபீக்" இவர் முன்னால் முபாரக்கின் ஆட்சியின் எச்சமாகவும் இருக்கிறார் . இவர்கள் இருவருக்கும் தான் "மீள் ஜனாதிபதி தேர்தல்" நடைபெற இருக்கிறது .

இருவருக்குமிடையில் உள்ள விகித வேறுபாடு மிக குறைவாகவே உள்ளது. இந்த வீதத்தை பார்க்கும் போது எகிப்திய மக்களின் போராட்டம் வெற்றுவேட்டாக மாறியுள்ளதை உணர முடிகிறது . மீண்டும் எகிப்திய ஆட்சி முபாரக்கின் எச்கங்ளுக்கே சென்று விடுமோ என்று அஞ்ச தோன்றுகிறது. எனவே மீள நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எகிப்திய மக்கள் சிந்தித்து செயல் பட வில்லையென்றால் மீன்டும் ஒரு முபாரக்கின் ஆட்சியை எதிர் கொள்ள நேரிடும் .
அப்படியான ஆட்சியில் இஸ்லாமிய சிந்தனை கொண்ட மக்களுக்கு என்ன நடக்கும் என்று அறிந்தே விடயமே .எனவே இந்த விடயத்தில் ஏனைய இஸ்லாமிய எண்ணம் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் வேற்றுமையை மறந்து ஓன்று பட்டு தங்கள் ஆதரவை இஸ்லாமிய வேட்பாளருக்கு வழங்குவார்களாக இருந்தால் நல்ல ஒரு மாற்ற அரசியலை பெற முடியும் .இன்னும் சொல்லப்போனால் இந்த நாலு வருட ஜனாதிபதி ஆட்சியில் எது நடைமுரைப்படுத்தப்படுகிறதோ அதுவே அந்த ஆட்சிக்கு பின்னும் தொடர இருக்கிறது .

இதையும் கவனத்தில் கொண்டு நல்ல ஆட்சியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எகிப்திய மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது.இந்த விடயத்தில் எகிப்திய புத்தி ஜீவிகளும், மார்க்க அறிஜெர்களும் நல்ல முடிவை மக்களுக்கு தெளிவு படுத்தி ,இந்த தெரிவில் உள்ள சாதக பாதக விடயங்களை தெளிவு படுத்தி நல்வழிக்கு இட்டு செல்வது சாலச்சிரந்ததாக இருக்கும் .இதன் விளைவாக இன்று மூன்று இஸ்லாமிய வேட்பாளர்கள் ஓன்று கூட இருப்பது குறிப்பிட தக்க விடயமாகும் . இந்த சந்திப்பு இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாற்றத்தை உண்டு பன்னக்கூடும் .எனவே என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .நாம் அல்லாஹ்விடத்தில் எகிப்திய மகளுக்கு நல்ல ஆட்சியை வழங்க துவா செய்வோமாக .

0 comments:

Post a Comment