கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் சற்று நேரத்துக்கு முன் நில அதிர்வொன்று உணரப்பட்டது. நுவரெலியா, ஹட்டன், பதியபெலல்ல உள்ளிட்ட பகுதிகளில் இது நன்றாக உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தமிழ்மிரரிடம் உறுதி செய்தது.

இந்த நில அதிர்வு இலங்கைக்குள் மாத்திரம் உணரப்பட்டதொன்றாகவே இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியின் காரணமாக இது ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பிரிவு தெரிவித்தது.

0 comments:

Post a Comment