கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஏழையாக கடலுக்குச் சென்று கோடீஸ்வரராக கரை திரும்பிய மீனவர்

இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடித்த போது விலை உயர்ந்த மீன்கள் சிக்கியதால் கோடீஸ்வரராகியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். மத்திய தரமான மீன் பிடி படகு ஒன்றை வைத்து மீன் பிடித்து வந்த இவரின் குடும்பம் வறுமையில் வாடியது.


ஆனால் தற்போது அதிர்ஷ்ட தேவதையின் கருணைப் பார்வைக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவருக்கு மிக உயரிய விலை கொண்ட 380 கோல் ரக மீன்கள் சிக்கின.
மீன்களிலேயே மிக உயர்ந்த ரகமாக கருதப்படும் இம்மீன்களுக்கு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அமோகமான வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்த கோல் மீனின் இதயப் பகுதி "கடல் தங்கம்' என அழைக்கப்படுகிறது.
மேலும் ஏராளமான மருத்துவக்குணங்கள் அடங்கிய இம்மீனினை வைத்து பல்வேறு மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த மீனின் துடுப்பு போன்ற பகுதியை மருந்து தயாரிப்பு கம்பெனிகள் அதிக அளவில் பயன்படுத்துவதோடு, ஒயினை சுத்தப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை மீன்கள் சந்தையில் கிலோ ஒன்றுக்கு 450 முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. ஒரு கோல் மீன் 15 முதல் 20 கிலோ எடை இருக்கும்.
ஹசன் வாகருக்கு 380 மீன்கள் சிக்கியதால் அதை தனது படகில் மட்டும் வைத்து கொண்டு வர முடியாது என்பதால் உறவினர்கள் இருவரின் படகுகளையும் வரவழைத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
இந்த மீன்களை விற்றதில் அவருக்கு ரூபாய் 80 லட்சத்திற்கு மேல் கிடைத்துள்ளது. ஏழையாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர் கோடீஸ்வரராக கரை திரும்பியுள்ள ஹசன் வாகரை அனைவரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment