கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி பரிசு வென்ற குடிசையில் வாழும் ஏழைபெண்.

குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி பரிசு வென்ற குடிசையில் வாழும் ஏழைபெண்.       

ஸ்டார் பிளஸ் மற்றும் சோனி ப்ளஸ் டிவியில் கோடீஸ்வரர் ஆகும் நிகழ்ச்சியான கெளன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி கடந்த சிலவருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் உள்பட பல பிரபலங்கள் நடத்தினர்.

சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த குரோர்பதி நிகழ்ச்சியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாயை வென்று சாதனை படைத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் Saharanpur, என்ற நகரத்தின் அருகில் உள்ள Sansarpur என்ற கிராமத்தை சேர்ந்தவர் Firoz என்ற 22 வயது இளம்பெண், சென்ற ஞாயிறு அன்று நடந்த குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் மிகச்சரியான பதிலை கூறி இறுதியில் ஒரு கோடி ரூபாயை வென்றார். இவர் தனது சகோதர சகோதரிகளுக்காக படிப்பை பாதியில் விட்டு தியாகம் படைத்தவர்.

இந்த பரிசு பணத்தை வைத்து 12 லட்ச ரூபாய் செலவில் தனது தந்தைக்கு இருதய ஆபரேஷன் செய்யப்போவதாகவும், உடன் பிறந்த தம்பி, தங்கைகளை படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டுவரப்போவதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதுவரை அந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் இந்த பெண்ணை ஏழ்மை காரணமாக இழிவாக நடத்தி வந்தனர் என்றும் ஒரு கோடி பணத்தை வென்றவுடன் தன்னை எல்லோரும் மேடம் என்று மரியாதையுடன் அழைப்பதாகவும் அவர் மேலும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றை இதுவரை நினைத்துப்பார்க்கவில்லை என்றும் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை நல்ல நிலையில் வைத்து காப்பாற்றுவது ஒன்றுதான் தனது லட்சியம் என்றும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment