கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தெவனகல பிரதேசத்தில் பதற்ற நிலை? பொதுமக்களின் பலத்த எதிர்ப்பினால் அதிகாரிகள் வெளியேற்றம்.

315388_242828159094313_1188596_n

கடந்த வியாழக்கிழமை 28ம் திகதி மாவனெல்லை நகர மத்தியில் பிக்குகள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற தினம் (28) மாலை மாவனல்லை பிரதேச செயலாளர் பிரியங்கனி நெதன்கொட அவர்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண தொல்பொருளியல் திணைகளத்தின் துணை பணிப்பாளர் திஸ்ஸ மடுரப்பெரும அவர்களும் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திகு வருகை தந்து பிக்குகளின் கோரிக்கையை இரண்டு கிழமையிட்குல் தீர்வை பெற்றுத்தாருவதாக உறுதியளித்தனர். மேலும் இப் பிரதேசத்தினை அளக்கும் வேளையை உடனடியாக அரம்பிப்பதற்கு கேகாலை நில அளவைத் திணைகளத்திற்கு 54400 ரூபாய் பணத்தினை ஒரு கிழமையிகுல் தொல்பொருளியல் திணைகளத்தினால் வழங்குவதாகவும் சப்ரகமுவ மாகாண தொல்பொருளியல் திணைகளத்தின் துணை பணிப்பாளர் திஸ்ஸ மடுரப்பெரும அவர்கள் உறுதியளித்தானர்.

இதற்கு அமையவே இன்று (03) பிரதேசத்தினை அளக்கும் வேளையை கேகாலை நில அளவைத் திணைகளம் மேற்கொள்ளவுள்ள முயற்ச்சி எடுத்துள்ளதாகவும். தெவனகல குன்றை சுற்றயுள்ள பிரதேசத்தினை தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்த நில அளவைத் திணைகள அதிகாரிகள் வருகைத் தந்துள்ளதாகவும், அளக்கும் வேளையை ஆரம்பித்துள்ளதாககவும் அப்பிரதேசத்தை இவ்வாறு அடையாளப்படுத்துவதனூடாக அங்கிருக்கும் முஸ்லிம்களது காணிகள் அபகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தற்பொழுது தெவனகல பிரதேசத்தில் பதற்ற நிலை நிலவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொது மக்களின் பலத்த எதிர்ப்பினால் நில அளவைத் திணைகள அதிகாரிகள் தற்பொழுது அந்த இடத்திள்ளிருந்து சென்றுள்ளனர். இதே வேளை கடுகஹவத்த பிரதேசத்தில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்வாதிகளினால் திட்டமிட்டு முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க முற்படுகின்றனர். இப்பிரதேசங்களில் முஸ்லிம்கள் மூன்று தலைமுறைகளுகு மேலாக வருகின்றனர். இப்பிரச்சினைகு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.

0 comments:

Post a Comment