கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ரயிலில் தீ: தப்பிக்க முயன்றவர்களில் மூவர் பலி; மரணமடைந்த முஸ்லிம் தம்பதியரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை வரகாபொலையில் இடம்பெறும்.



மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கிய பயணித்த ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வியாங்கொடையில் வைத்தே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வேளையில் அந்த ரயிலிருந்து பாய்ந்து தப்பிக்க முயன்றவர்களில்,  கொழும்பை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு மூவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் பலியானவர்கள் வரக்காபொலை, மெதவிய பகுதியைச் சேர்ந்த தம்பதியரும் இலங்கை வான்படையைச் சேர்ந்த ஒருவர் எனவும் தற்சமயம் அறியப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

.. இவ்விபத்தில் மரணமடைந்த முஸ்லிம் தம்பதியினர் எமது ஊரைச் சேர்ந்த சகோதரி Bபிஷிர் (ஆசிரியை- திகாரிய அங்கவீணர் நிலையம்), கொவுஸ் நானா அவர்களுடைய சகோதரரும் மற்றும் யுனுஸ் ஆகியோரின் நெருங்கிய உறவிணரும் ஆவர்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

 

1 comments:

Anonymous said...

ஆமீன்

Post a Comment