கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

செவ்வாயில் கால்பதிப்பதற்காக ப+மியில் 520 நாள் விண்வெளிப் பயிற்சி

சந்திரனில் கால்பதித்த மனிதன் தற்பொழுது செவ்வாயில் கால் வைப்பதற்கான தீவிர முயற்சியில் குதித்துள்ளான். செவ்வாய் கிரகம் சந்திரனை விட அதிக தூரத்தில் உள்ளதால் அங்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னரே பூமிக்கு திரும்ப நேரிடும்.
அதனால் இதற்கான பயிற்சிகள் செவ்வாய் கிரகம் போன்ற சூழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக மொஸ்கோவிலுள்ள ஆய்வு மையத்தில் உலோகக் கூண்டொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் நுழைந்தால் செவ்வாயில் இருக்கும் மனநிலைதான் வருமாம். இதற்குள் ஒரு பக்கத்தில் செவ்வாய் கிரக விண்கலம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த கூண்டில் நுழைந்த ஆறு விண்வெளி வீரர்களுக்கும் 24 மணி நேரமும் தனிமைதான். சூரியனைப் பார்க்க முடியாது. 10 நாட்களுக்கு ஒருமுறை வேண்டுமானால் குளிக்கலாம். வெளியில் வரவே முடியாது. தூங்குவதற்கு தனி அறைகூட இதில் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளே புகும்போது அளிக்கப்பட்ட தண்ணீர், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை தான் கடைசி நாள் வரை சமமாக பிரித்து சாப்பிட வேண்டும். தண்ணீரையும் குறைவாக பயன்படுத்த வேண்டும்.
பொழுது போக்குக்கு புத்தகம் படிக்கலாம். கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸ் கூட விளையாடலாம்.
வெளியில் இருப்பவர்களை ஈமெயில் மூலம் மட்டுமே தொடர்புகொள்ள முடியும். தினமும் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளியில் உள்ள விஞ்ஞானிகளுக்கு இதன் மூலமாக அவர்கள் தெரிவிப்பார்கள். அடைக்கப்பட்ட கூண்டுக்குள் இவர்கள் 520 நாட்கள் தொடர்ந்து தங்கவேண்டும்.
கிட்டத்தட்ட பூமியில் ஒரு செவ்வாய் கிரகம் உருவாக்கப்பட்டு, அதற்கு சென்று வருவது போல, விண்வெளி வீரர்களை வைத்தே ஆய்வு நடத்தப்படுகிறது. நெருங்கவே முடியாத செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் சென்று, திரும்பிவர முடியுமா என்று பார்க்கவே புதுமையான முறையிலான இந்த சோதனையை ரஷ்யா ஆரம்பித்துள்ளது.
520 நாட்கள் இருக்க முடியாதவர்களுக்கு இந்த பரிசோதனையில் இருந்து பாதியிலே விலக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
செவ்வாயில் நடக்க முடியுமா? என்பதே ஒத்திகையில் முக்கிய பரிசோதனை. செவ்வாய் எப்படியிருக்கும் அதில் நடக்க முடியுமா என்பதை கற்பனை செய்து அதற்கேற்ப ஒத்திகை நடத்தப்படுகிறது. அதற்காக செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பும், பெரிய மணல் திட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
-தினகரன்

1 comments:

தமிழில் தகவல் தொழில் நுட்பம் said...

மிகவும் அருமையான பதிவு

வாழ்த்துக்கள்

Post a Comment