கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கிர்கிஸ்தான் இன மோதல்களைக் கட்டுப்படுத்த

நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டதென்கிறார் இடைக்கால அரசின் ஜனாதிபதி


கிர்கிஸ்தானில் எழுந்துள்ள இன மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டு இடைக்கால அர சாங்கம் ரஷ்யாவிடம் படைகளை அனுப்பி உதவுமாறு கேட்டுள்ளது.

மோசமாகப் பரவும் வன்முறை களைக் கட்டுப்படுத்த பொலிஸார் இராணுவத்தினர் வீதிகளின் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வன்முறைகளில் இறங்குவோரைக் கைது செயயம்படியும் நிலைமை மோசமடைந்தால் துப்பாக்கிப் பிர யோகம் செய்யுமாறும் இடைக்கால அரசின் ஜனாதிபதி ரோஸா ஒட்டுன் பைவியா உத்தரவிட்டார்.

வியாழக்கிழமை கிர்கிஸ்தானில் கிர்கிஸ் உஸ்பெக் இனத்தாரிடையே இன மோதல்கள் வெடித்தன. இதில் 75 பேர் பலியாகினர்.

ஆயிரம் பேர் வரை காய மடைந் தனர். வன்முறைகளிலீடுபட்டோர் தனியார் அரச சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

இதனால் நிலைமை மோசமடை ந்தது. தனியார், அரச சொத்துக் களைப் பாதுகாக்கவும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

நிலைமை எங்களின் கைகளை விட்டுப் போய்விட்டது. எனவே ரஷயாவிடம் இராணுவ உதவிக ளைக் கேட்டுள்ளோம் என இடை க்கால அரசின் ஜனாதிபதி கூறினார்.


இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் கூறுகையில், கிர்கிஸ்தானில் நடப்பவை உள் நாட்டு விவகாரம் அங்கு இராணு வத்தை அனுப்புவது சம்பந்தமாக நாங்கள் இன்னும் முடிவு எடுக்க வில்லை என்றார். வியாழக்கிழமை ஆரம்பித்த இன மோதல்கள் சனிக் கிழமை வரை மிக மோதசாகப் பரவியது.

கட்டடங்கள் கடைகள், வாகன ங்கள் என்பன தீயிட்டுக் கொளுத்த ப்பட்டன. ஆயிரக் கணக்கான உஸ் பெக் இனப் பெண்கள், குழந்தைகள் வீதிகளில் அநாதரவாகக் கதறியழு த்தனர். செஞ்சிலுவைச் சங்கம் நிலைமையைக் கட்டுப்படுத்த உச்ச கட்ட முயற்சிகளை மேற் கொண் டது.

அங்குள்ள நிலைமை களைக் கட்டுப்படுத்த நிவாரணப் பொருட்களையும் உதவியாளர்களை யும் அனுப்பவுள்ளதாகத் தெரிவித்தது. உஸ்பெகிஸ்தான் அரசாங்கம் நிலைமையைக் கட்டுப்படுத்துமாறு சர்வதேசத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment