கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இனந்தெரியாதோரால் வியாபாரி தாக்கப்பட்டுள்ளார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த பிரபல வர்த்தகரொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடு கொள்வனவுக்காக கிருந்துவளயைய்யொட்டிய ஊரொண்டுக்குச்சென்று சுமார் 50000 ரூபாய் பெருமதியான மாடொன்றை கொள்வனவுசெய்து சில பாதையொன்றினால் மாட்டைக் கொண்டுவந்துள்ளார். வரும் வழியில் வல்கமுள்ளைப் பகுதியில்வைத்து வாகனமொன்றில் வந்த சிலர் இவர்களை வழிமரித்துத் தாக்கியிருக்கின்றனர். அத்துடன் மாட்டையும் இவர்கள் பிடியிலிருந்து தப்பிச்செல்லவிட்டிருக்கின்றனர்.மாலை வேலை என்ற படியாலும்,சனநடமாட்டம் குறைந்த பாதை என்பதனாலும் இச்சம்பவம் கச்சிதமாக நடந்துள்ளது. சம்மந்தப்பட்ட வியாபாரிக்கு அவ்வளவு பாதிப்பில்லாவிடினும் மாற்றுமத சகாக்களுக்கு பலத்த அடிகள் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. பின்னர் வல்கமுள்ளை மற்றைய வயற் பகுதியிலிருந்து மாட்டைப் பிடித்ததாகவும் சொல்லப்படுகின்றது. வியாபாரிகள் சிலரின் சதியினால்தான் இச்சம்பவம் நிகழ்துள்ளதாகவும் வியாபாரிகளின் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே இதுபோன்று வியாபாரம் செய்வோர் மிகக் கவணமாகவும், முடிந்தளவு சட்டபுர்வமுhகவும் புரிந்துணர்வுடனும், நேர்மையாகவும் தமது வியாபாரநடவடிக்கைகளை அமைத்துக்கொள்வது நல்லதாகும்.

1 comments:

Anonymous said...

கஹட்டோவிட்டாவின் வானை கந்தின் வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்த ஆசநிக்காய் மரம் இன்று காலை(27.6.10) வெட்டப்பட்டுவிட்டது.

Post a Comment