கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கொழும்பில் பூமி அதிர்ச்சி- சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.(இலங்கை நேரம் 3.30 அதிகாலை)
கடல்மட்ட உயர வாசிப்புகளில் சுனாமி அலை உருவாகுவது அவதானிக்கப்படாமையால் சுனாமி எச்சரிக்கை நீக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மக்கள் வெளியேறத்தேவை இல்லையென்றும் இலங்கை வானிலை அவதானிப்பு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை
இன்று(6/13/2010) அதிகாலை இந்து சமுத்திரத்தில் இடம்பெற்ற 7.7 பூமி அதிர்ச்சியை தொடர்ந்து இலங்கை பூராவும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 12.55 மணியளவில் ஏற்பட்ட பூமிஅதிர்வை தொடர்ந்து பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் சுனாமி எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது. கடலுக்கு அருகில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
பூமி அதிர்வு 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
மீண்டும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

அதிர்வு ஏற்பட்ட இடம் மையப்பகுதி- படம்



இலங்கையில் கண்டி, அனுராதபுரம், பதுளை,கொழும்பு ஆகிய இடங்களில் அதிர்வு உணரப்பட்டுள்ளது..

தொடர்புடைய செய்தி
இன்று(6/13/2010) அதிகாலை 12.55 மணியளவில் கொழும்பில் பூமி அதிர்வு உணரப்பட்டு மக்கள் அச்சத்தில் அலறிஅடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். நீண்ட நேரம் காத்திருந்தும் மீண்டும் அதிர்வெதுவும் தென்படாததால் மக்கள் வீடுகளுக்கு அச்சத்துடனேயே திரும்பினர்.

0 comments:

Post a Comment