கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் மாபொரும் கண்காட்சி


பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடம் ஏற்பாடு செய்துள்ள அல்குர்ஆனின் அறிவியல் அற்புதமும் உலக நாகரீகத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான மாபொரும் கண்காட்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.

நான்கு பிரதான பிரிவுகளை கொண்ட இக்கண்காட்சியில், இஸ்லாமிய கிலாபத்தின் இறுதி பேராகிய துருக்கிய உஸ்மானிய பேரின் வரலாற்று சின்னங்கள் மற்றும் ஈரானிய புராதன கலை, கலாச்சர சின்னங்களை காட்சிப்படுத்தும் விஷேட காட்சிக்கூடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்கள் என 50,000 மேற்பட்டேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கண்காட்சியை காலை 8 மணி முதல் இரவு 8 மணி கண்டுகளிக்கலாம் என ஏற்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கண்காட்சி எதிர்வரும் திங்கட்கிழமை வரை இடம்பெறவுள்ளது. இறுதி நாள் பெண்களுக்கு என ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இத்தினத்தில் எக்காரணம் கொண்டு ஆண்கள் கண்காட்சி வளாகத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

0 comments:

Post a Comment