கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

காலி தெய்யந்தர விஹாரை மீது மின்னல் தாக்குதல் - 15 பேர் காயம்



விஹாரையொன்றில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்கு உட்பட 15 பேர் இன்று 15-01-2014 மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் மலையுச்சியில் அமைந்துள்ள தெய்யந்தர விஹாரையில் இன்று பௌர்ணமி தின பூஜை வழிபாடு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டவர்களில் 15 பேரே இன்று பிற்பகல் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி தெய்யந்தர அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஏனையோர் வீடு திரும்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Jaffna Muslim

0 comments:

Post a Comment