கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அம்பத்தன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் - கதவை உடைத்து அட்டகாசம்

கண்டி -அம்பத்தன்ன -வெளிக்கட பகுதியில் அமைத்திருக்கும் மஸ்ஜித் மீது காடையர்களினால் தாக்குதல் நடாத்தப் பட்டு மஸ்ஜித்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது  . இந்த சம்பவம் குறித்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி -அக்குரணை நகரில் இருந்து சில மயில்கள் தூரத்தில் அம்பதன்ன -கல்கினை வீதியில் அமைத்துள்ள குறித்த மஸ்ஜிதுக்கு நேற்று இரவு 11 மணியளவில் புகுந்த காடையர் கும்பல் ஒன்று மஸ்ஜிதுக்கும் சேதத்தை ஏற்படுத்து மஸ்ஜிதின் முஅத்தின்  மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது .
குறித்த பகுதிக்கு வாகனம் ஒன்றில் வந்த சுமார் 25 பேரை கொண்ட இனம் தெரியாத காடையர் கும்பலொன்று இந்த தாக்குதலை நடாத்தியுள்ளது  .

இத் தாக்குதல் காரணமான பள்ளி வாசலின் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் பள்ளிவாயல் கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சிங்கள முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக ஒற்றுமையான வாழும் இப் பிரதேசத்தின் ஒற்றுமையை சீர் குழைப்பதற்காக சிலர் திட்டமிட்டு இச் செயலை செய்திருக்கலாம் என பிரதேசத்தில் வசிக்கும் பௌத்த தேரர்கள் மற்றும் பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இச் செய்தி கேல்வியுற்றதும் பௌத்த தேரர்கள் உற்பட பிரதேசத்தில் வசிக்கம் சிங்கள மக்கள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் குனதிலக்க ராஜபக்ஷ, பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர மடலுஸ்ஸ ஆகியோரும் அங்கு சமூகம் தந்திருந்தனர்.மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எச் .என். பீ. அம்பன்வல தலமையில் விஷேட பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

 

0 comments:

Post a Comment