கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அசைக்க முடியாத ‘வட்ஸ்அப்’: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 அம்சங்கள்…!

-

லண்டன்: கிட்டத்தட்ட ரூ 1 லட்சம் கோடி அளவுக்கு பேஸ்புக்கால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள ‘வட்ஸ்அப்’ நிறுவனத்தின் சுவாரஸ்யமான பக்கங்கள் குறித்த செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. உலக மகா விற்பனை நடந்து சில நாட்களுக்குள்ளாகவே ‘வட்ஸ்அப்’ சேவை திடீரென உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு அந்த நிறுவனத்தை நெளிய வைத்த போதிலும் கூட ‘வட்ஸ்அப்’ இன்னும் ஸ்திரமாகத்தான் இருக்கிறது.
இங்கு ‘வட்ஸ்அப்’ நிறுவனத்தின் ஐந்து முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்…
’வட்ஸ்அப்’ நிறுவனத்தை இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் தற்போது பேஸ்புக் வாங்கியு்ளது. அதாவது ரொக்கமாக ரூ. 24 ஆயிரத்து 852 கோடி கொடுக்கிறது.

பங்குகளாக ரூ. 74 ஆயிரத்து 556 கோடியைக் கொடுக்கிறது. இது போக ஊழியர்களிடம் ரூ. 18,639 கோடி மதிப்பிலான பங்குகளைக் கொடுக்கிறது. இப்படித்தான் மொத்த வியாபாரத்தையும் அது முடித்துள்ளது.

’வட்ஸ்அப்’பை உலகம் முழுவதும் 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். டிவிட்டரை 250 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.2 பில்லியன் பேர் ஆவர்.
450 மில்லியன் பேர் ’வட்ஸ்அப்’பை பயன்படுத்தினாலும் அதன் அலுவலக ஊழியர்களின் பலம் எவ்வளவு தெரியுமா.. ஜஸ்ட் 55 பேர்தானாம். டிவிட்டரில் 2300 பேர் பணியாற்றுகிறார்கள். பேஸ்புக்கில் 6337 பேர் உள்ளனர்.
இதற்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் 2012ம் ஆண்டு இன்ஸ்டாகிராமை 1 பில்லியன் டொலருக்கு வாங்கியது. அதே போல மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பை 8.5 பில்லியன் டொலருக்கு வாங்கியதே பெரிய வர்த்தகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

‘வட்ஸ்அப்’ மூலம் ஒரு நாளைக்கு 50 பில்லின் மெசேஜ்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றனவாம். அதேபோல 600 மில்லியன் போட்டோக்களை அனுப்புகிறார்கள். 100 மில்லியன் வீடியோக்ள் போய்க் கொண்டுள்ளன.
இது போக ஒரு நாளைக்கு தோராயமாக 10 லட்சம் பேர் இதில் இணைந்தபடி உள்ளனர் என்பதும் அசைக்க முடியாத உண்மை!
(விலை மதிப்பு இந்திய ரூபாய்களில்)

0 comments:

Post a Comment