கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மீடியாக்களில் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் ஒரு இனப்படுகொலை

 
Central African Republic (CAR) என்று அழைக்கப்படும் மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று. சூடான் மற்றும் சாட் ஆகியவற்றை எல்லைகளாக கொண்ட நாடு.பிரஞ்சு காலனி ஆதிக்கத...்தில் இருந்து 1960 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது... கிடத்தட்ட 50 இலட்சம் மக்களை தொகையை கொண்ட நாடு.. இந்நாட்டில் 80% மக்கள் கிறிஸ்துவர்கள்.15% மக்கள் முஸ்லிம்கள்..

கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலையை anti-Balaka என்ற கிறித்துவ பயங்கரவாத குழு துவங்கி இன்றுவரை லட்சக்கணக்கான மக்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டுவிட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.. ஆயிரக்கணகான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்..

Amnesty International அறிக்கையின் படி முஸ்லிம்கள் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்..மேலும் முஸ்லிம்கள் தங்களின் இருப்பிடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.. நூற்றுக்கனகான முஸ்லிம்களை வெளியேற விடாமல் கிறிஸ்துவ தீவிரவாத குழுக்கள் கொன்று குவித்துள்ளதாகவும் , தீயிட்டு கொளுத்துவதாகவும் , தன்னார்வு குழுக்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்..மேலும் இந்த படுகொலைகளை ஒடுக்க பிரஞ்சு ராணுவம் தங்களது 5000 படைகளை அனுப்பியுள்ளது..ஆனால் இந்த படைகளும் கூட வெறும் 50 மீட்டர் தூரத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளை கூட தடுப்பதாக இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் பல நாட்டு தன்னார்வு குழுக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன..மேலும் ஐநா சபை பிரஞ்சு அரசு மேலும் ராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது ..

இந்த படுகொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பெண் அதிபர் Catherine Samba-Panza கிறித்துவ தீவிரவாத குழுக்களுக்கு எதிரான போர் துவங்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.மேலும் இந்நாட்டின் பூர்வீக குடிமக்களான முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இன அழிப்பை கிறிஸ்துவ தீவிரவாத குழுக்கள் அரங்கேற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்....மேலும் அவர் கூறுகையில் தன்னை ஒரு பெண் என்பதால் பலகீனமானவராக நினைத்து வருகின்றனர்..ஆனால் தற்பொழுது அவர்களாகவே தங்கள் அழிவை தேடுகின்றனர் என்று அறிவித்துள்ளார்..

இதில் வேடிக்கை என்னவெனில் பல மாதமாக தொடர்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் இன அழிப்பை பற்றி எந்த ஒரு ஊடகமும் செய்திகளை வெளியிடாமல் திட்டமிட்டு மறைத்து வருகின்றன.. ஒரு வேலை பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது முஸ்லிம்கள் சமூகம் தானே என்ற எண்ணமாக கூட இருக்கலாம்..எப்படி பர்மா , செஞ்சியான் , செசன்யா , பாலஸ்தீன் , ஈராக் , சிரியா , ஆப்கன் , சோமாலியா , மாலி இன்னும் பல பகுதிகளில் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது கள்ள மவ்னத்தை மட்டும் பதிலாக கொண்டு செயல்படுவார்களோ அதை போன்ற நிலை தான் இன்று CAR யிலும்..ஆனால் அதே நேரத்தில் குண்டு வெடிப்புக்களின் மூலம் அப்பாவி மக்கள் இறந்து யார் காரணம் என்றே தெரியாவிட்டாலும் கூட அந்த செய்தியை கூட பல நாட்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் வெறிச்செயல் என்று வெளியிட மட்டும் வெக்கப்படுவதில்லை.. கேடு கெட்ட ஊடகங்கள
 

0 comments:

Post a Comment