கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மினரல் வாட்டர் நன்மையா? தீமையா?


குடி தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.

அந்த காலங்களில் ஊர் தோறும் நல்ல தண்ணீர் கிணறுகள். கு...ளங்கள், நீர் தேக்கங்கள் இப்படியாக சுத்தமான குடி நீரை மக்கள் அருந்தி வந்தனர்.

இன்றோ, வீடுகள் தோறும் மினரல் வாட்டர் கேன்கள், பாக்கெட் வாட்டர், பாட்டால் வாட்டர், என்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை.

தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ இதை பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் பொருளாக்கி விட்டனர் இந்த கார்பரேட் கொள்ளையர்கள். உலகம் முழுவதும் தண்ணீர் இன்று ஒரு தலை சிறந்த பிசினெஸ்.

1992ல் நடைபெற்ற சர்வதேச நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு நீருக்குப் பொருளாதார மதிப்பு உள்ளது. எனவே இதை ஒரு வணிகப்பண்டமாகப் பாவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்

உலகின் பல பகுதிகளில் நல்ல தண்ணீர் அதாவது குடி தண்ணீர் பற்றாக்குறை, காணப்படுகிறது. இதற்க்கு காரணம் குடிதண்ணீர் வேகமாக மாசு அடைந்து வருவதே. தொழிற்சாலைக் கழிவுகள், காடுகள் அழிப்பு, சுற்று சூழல் மாசுபடுதல் இவற்றால் நல்ல தண்ணீர் வளங்கள் அழிந்து குடி தண்ணீருக்கு பெரும் தட்டுபாடு நிலவி வருகிறது.

கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பது போல் தண்ணீரை சுத்திகரிக்க தேவையில்லை. லைப் வாட்டர், அக்வாஃபினா, பிஸ்லரி, பெய்லி, நெஸ்ட்வேயின் பவர் லைஃப், பார்லே, கேரிகோ போன்ற நிறுவனங்களின் தண்ணீரில் ஆர்கட்னா குளோரின், ஆர்கட்னா பாஸ்பரஸ் என்ற நச்சு பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது மினரல் வாட்டர் என்கிற பெயரில் விற்கப்படும் தண்ணீர்கள் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டதும் அல்ல.

மேலும் இந்த தண்ணீரை அருந்துவதன் மூலம் கேன்சர் போன்ற ஆள் கொல்லி நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் மக்கள் இந்த மினரல் வாட்டரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்க்கு பதிலாக தரம் வாய்ந்த பில்ட்டர்களை வாங்கி நமது கார்பரேசன் வாட்டரை பில்ட்டர் செய்து குடித்தல் அதுவே போதுமானது. அல்லது தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சீரகம் அல்லது பெரும் சீரகம் இட்டு அருந்தலாம். சுருங்க சொன்னால் மண்பானையில் துளசி இலைகளை போட்டு தண்ணீரை தேக்கி அருந்தி வருவது மிகவும் நன்மைபயக்க கூடியது.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறித்து டாக்டர் புகழேந்தி கூறுகையில், 'தண்ணீர் வியாபாரத்தில் அதிகப்படியான வருவாய் கிடைப்பதால் அது தனிநபர் சொத்தாக மாறிவிட்டது. தனியார் நிறுவனங்கள் பெருமளவில் நீரை உறிஞ்சி விற்பனை செய்கின்றன. தண்ணீரில் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவுக்கு தாது உப்புக்கள் இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, தண்ணீர் நிறுவனங்கள் பரிசோதனை செய்யும். இந்தப் பரிசோதனை எந்த அளவுக்கு உண்மையானது என்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? இதை அவ்வப்போது வெளிப்படையாக மக்கள் முன்னிலையில் செய்வதன் மூலம் தான் அது பாதுகாப்பான குடிநீரா என்பது தெரியவரும்.

உலகில் 23 சதவிகித நோய்கள் நீர் மூலம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. வயிற்றுப்போக்கு ஆரம்பித்து, ஹெபாடைடிஸ் வரையிலும் பல நோய்கள் ஏற்படுகிறது. பாதுகாப்பாக ஸ்டோரேஜ் செய்யவில்லை எனில் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், பல நிறுவனங்கள் சுத்திகரிப்பு ஏதும் செய்யாமல் நேரடியாக கேன்களில் நீரைப் பிடித்து விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை' என்றார்.

எப்படி கண்டறிவது?

பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை ஆய்வகங்களில் மட்டுமே கண்டறிய முடியும். நீங்கள் வாங்கும் கேன் தண்ணீரின் நிறம் கலங்கலாக இருந்தாலோ, சுவையில் மாறுபாடு இருந்தாலோ அது சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்காது. இதுபற்றி உடனே பி.ஐ.எஸ்.-ல் (Bureau of Indian Standards-BIS)புகார் தெரிவிக்கலாம்.

உலக அளவில் குடிநீர் விற்பனை செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. விரைவில் 'இது முதல் இடத்துக்கு வந்துவிடும்’ என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 128-வது இடத்தில் உள்ளது.

சென்னை 'மெட்ரோ வாட்டர்’ நீரின் தரம்பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேள்விகள் கேட்டது. இதற்கு சென்னை மாநகராட்சி அளித்த பதில், '2007-ம் ஆண்டு முதல் தோராயமாக மேற்கொள்ளப்பட்ட 440 பரிசோதனைகளிலும் அந்த நீர் 'குடிக்க தகுதியற்றது’ எனத் தெரியவந்தது' என்பதாகும்.

- பா.பிரவீன் குமார் @ டாக்டர் விகடன்

Sources : http://www.sinthikkavum.net/search/label/மருத்துவம்

0 comments:

Post a Comment