கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லிம் விசமப்பிரசாரங்களால் மீண்டும் களத்துக்கு வந்தேன்: உயிர்வாழும் ஒரே முன்னாள் ஜனாதிபதி



இலங்கையில் முஸ்லிம்களது சனத்தொகை அதிகரிக்கிறது, இலங்கை முஸ்லிம் நாடாக போகிறது  போன்ற கட்டுக் கதைகள் உண்மையிலாத போதும் அதனை எதிரித்து கருத்து தெரிவிப்பதற்கு எவரும் முன்வராத நிலையில் நாட்டின் முதன்மை பிரஜை என்ற இது தொடர்பாக உண்மையினை தெரிவிப்பதற்கு தான் முன்வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்துள்ளார் .

உயிர்வாழும் ஒரே முன்னாள் ஜனாதிபதியும் , பிரதமரும் என்ற வகையில் நாட்டில் மதங்களுகிடையில் நிலவும் பதற்றத்தை போக்குவதற்கு தான் முன்வந்தாக அவர் தெரிவித்துள்ளார் .
 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் நடைபெற்ற. தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் ஒழுங்கு செய்த சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்க நிகழ்வின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார் .
 
எம்.அம்ஹர்:

0 comments:

Post a Comment