கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜே.வி.பியின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க, செயலாளராக ரில்வின் சில்வா



ஜே.வி.பியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று 02-02-2014 நடைபெற்ற ஜே.வி.பியின் 7வது தேசிய மாநாட்டில் அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ரோஹன விஜேவீர, சோமவன்ஸ அமரசிங்கவுக்கு பின்னர் அந்த கட்சியின் மூன்றாவது தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவாகியுள்ளார்.

அதேவேளை ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக ரில்வின் சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் ஜே.வி.பி.யின் கொள்கைப் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

கட்சியின் தலைமைத்துவ பதவிக்காக அநுரகுமார திஸாநாயக்க விஜித ஹேரத் கே.டி. லால்காந்த மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment