கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி தொழுகை அறை பெளத்த கடும்போக்கு சக்திகளால் இழுத்து மூடப்பட்டுள்ளது



கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் அமைச்சர் பௌசியினால்  புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பின்னர் திறந்து வைக்கப்பட்ட   தொழுகை அறை பெளத்த தேரர் தலைமையிலான இனவாத சக்திகளினால் உடனடியாக இழுத்து மூடப்பட்டுள்ளதுடன் அதன் முகப்பும் உடைக்கப் படுவதாக தகவல்கள் குறிப்பிடுகிறது . 1994  ஆம் ஆண்டில் முதல் தடைவையாக இயங்க தொடங்கியுள்ளது என்பது சுட்டிக்காட்டத் தக்கது .
 
கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் வைத்திய பேராசிரியர் றிஸ்வி சரிப் தலைமையில் 41ஆம் வார்ட்டில் தொழுகை அறையொன்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அமைச்சர் பௌசியினால் திறந்து வைக்கப்பட்டது.
 
அடுத்த நாள் இரவே வைத்தியசாலைக்குள் உள்ள விகாரையின் பௌத்த குருவினாலும் அவரது ஆதரவாளர்களினால்  அத் தொழுகை அறை உடனடியாக இழுத்துமுடப்பட்டுள்ளது. அத்துடன் வைத்தியசாலைப் பணிப்பாளர் அணில் ஜயசிங்கவை இப் பௌத்த குரு அவரது வைத்தியசாலையில் உள்ள வீட்டுக்குச் சென்று இதனை உடனடியாக முடுவிடும்படியும் உத்தரவிட்டுள்ளதாக வைத்தியசாலையின் கொழும்பு வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அஸ்ரப் ஹுசைன் தெரிவித்தார்.
 
இவ் வைத்தியசாலை 41ஆம் வார்ட்டில் டாக்டர் றிஸ்வி சரீபினால் 1994 இல்  வைத்தியசாலையின் அனுமதியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட 10 அடி கொண்ட ஒரு அரையாகும்.
 
இவ் அறை  மீள புனர்நிர்மாணிக்கப்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு தொழுகை  நடைபெறாது தடைப்பட்டிருந்தது . அதன்  பின் டாக்டர்  றிஸ்வி சரிப் தனது நிதியில் இந் அரையை மாபில் இட்டு வர்ணம் பூசி  முகப்பையும்  புனர் நிர்மாணம் செய்திருந்தார். இதற்காக வைத்திய அத்தியட்சகர் அணில் முனசிஙகவிடம் அனுமதியும் பெற்றிருந்தார்.
 
இது  சிரேஸ்ட அமைச்சர்   ஏ.எச்.எம் பௌசியைக் கொண்டு  கடந்த புதன்கிழமை திறந்து  வைக்கப்பட்டது. அத்துடன் அஸர் தொழுகையும் வருகைதந்த அதிதிகளினால் தொழுவிக்கப்பட்டது இவ் வைபவத்திற்கு வைத்திய பணிப்பாளர் அனில் முனசிஙக் கலந்து கொள்ளவில்லை.
திறந்து வைத்து வைக்கப் பட்ட அந்த தொழுகை அறை மீள மூடப்பட்டுள்ளதாக  வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சர் பௌசிக்கும் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக  பாதுகாப்பு அமைச்சின் கண்கானிப்பு பணிப்பாளருக்கும் அறிவுத்துள்ளோம். ஆனால் தற்போது வைத்தியசாலை பணிப்பாளரின் உத்தரவுக்கு அமைய பொறியியலாளர்களினால்  தொழுகை அறை முகப்புக்கள் உடைக்கப்பட்டு அவை மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.என  டாக்டர் றிஸ்வி சரீப் தெரிவித்துள்ளார் .
 
கடந்த 40 வருடகாலமாக இவ் வைத்தியசாலைக்கே தமது உயிர் உடல் அர்ப்பணித்து மூவினங்களுக்கும் சேவை செய்து வருகின்றவரும் டாக்டர்  றிஸ்வி சரீப் நிர்வாகத்தில் இருந்த வந்த வார்ட்டில் தனது கடமை நேரங்களில் தொழுகையில் ஈடுபட முடியவில்லையே எனவும் இந்த நாட்டில் தனது மத கடமையை செய்ய இடமில்லையென அவர் மேலும்  அங்கலாயித்துக் கொண்டிருக்கின்றார்.
 
கொழும்பு  வைத்தியசாலைகளில் உள்ள வார்ட்டுகளுக்கு நாளாந்தம் முஸ்லிம் தனவந்தர்கள்,வர்த்தக நிறுவனங்கள் வார்ட்டுகளை நிர்வகிக்க வாரி வழங்கி வருகின்றனர். அண்மையில் கூட சவுதிஅரேபியா மற்றும் குவைத் நாடுகளின் அரசாங்க நிதியில்  5 மாடிகளைக் கொண்ட வார்ட்டும் ஒன்றும் நிர்மாணிதுக் கொடுக்கப்பட்டது. அதனை ஜனாதிபதி திறந்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் எம்.பி.பி. எஸ் டாக்டர்கள் 75க்கும் உட்டபட்ட வைத்திய ஊழியர்களும்    இங்கு கடமையாற்றுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 40 வீதத்துக்கும் அதிகமான முஸ்லி ம்கள் வாழுகின்றனர். எனவும் அஸ்ரப் ஹீசைன் தெரிவித்தார்.
 
அஸ்ரப் எ சமத்:

0 comments:

Post a Comment