கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மத்தல விமான நிலையத்திற்கு வரும் மயில்களை சுட துப்பாக்கிதாரிகள்

மத்தல விமான நிலையத்திற்கு வரும் மயில்களை சுடுவதற்காக துப்பாக்கிதாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இது இறைவனின் சாபத்திற்கு ஆளாகும் நடவடிக்கை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் தொழில் புரிய சென்றவர்கள், அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, மொனராகலை, பதுளை, நுவரெலியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் இருப்பதால், அவர்களை மத்தல விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என அரச அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
மத்தல பிரதேசத்தை மயில்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற துப்பாக்கி ஏந்தியவர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கதிர்காம கந்தன் இருக்கும் பிரதேசத்தில் மயில்களுக்கு தொந்தரவு செய்தால், அதனை செய்தவர்களும், செய்யுமாறு தூண்டியவர்களும் இறைவனின் சாபத்திற்கு உள்ளாகுவர் என்றார்.

0 comments:

Post a Comment