கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மூன்று பாதைகளில் பஸ்நேர மாற்றம் - ஆணைக்குழுவின் தலைவா் தெரிவிப்பு



மூன்று பாதைகளில் அடுத்த ஏப்றல் மாதம் முதல் புதிய பஸ் போக்குவரத்து நேர அட்டவணை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்துகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
மாவனல்லை – கண்டி, கேகாலை – கண்டி, கெகாலை – கொழும்பு ஆகிய பாதைகளில் பயணிக்கின்ற தனியார் பஸ்களின் நேர அட்டவணைகள் மாற்றம் செய்யப்படவுள்ளன. 
இந்தப் பாதைகளில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களின் நேர ஒழுக்கில் நீண்ட காலமாக நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment