கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சிங்கள சமூகத்திடம் மன்னிப்புக் கோறவேண்டுமாம் ஹக்கீம்.


நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம், இலங்கை நிலைமைகள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்காக ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

மன்னிப்பு கோரவிட்டால் ஹக்கீமை தோலுரிக்கப் போவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கள சமூகத்திடம் ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஹக்கீமிற்கு நாட்டின் நீதி அமைச்சுப் பதவியை ஏன் ஜனாதிபதி வழங்கினார் என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைச் சிறுபான்மை மதங்கள் மீது சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள் அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாக குற்றம் சுமத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

0 comments:

Post a Comment