கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பொதுபல சேனாவை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டு வாக்கு பறிக்க முயற்சி.- குரவலான கஹடோவிடாவில் அமைச்சா் விஜித ஹேரத்




பொதுபல சேனாவை முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிராக தூண்டிவிட்டு முஸ்லிம் காங்கிரஸூக்கு முஸ்லிம்களின் வாக்கை பரித்துக் கொடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். 
அத்தனகல்லை, குரவலான பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
இது போன்ற நாடகங்கள் பல தேர்தல்களிலும் நாம் கண்டுள்ளோம். தேர்தல் முடிந்ததும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியுடன் ஒட்டிக் கொள்வார். அரசாங்கத்துக்கு எதிராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் செயற்படுவதாக அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பொய்யாக கூக்குரல் இடுகின்றார்கள். அப்படி அவர் உண்மையாகவே செயற்படுவதாக இருந்தால், ஏன் இன்னும் அமைச்சுப் பதவியில் வைத்திருக்கிறார்கள். 
பொதுபல சேனா முஸ்லிம்களின் பள்ளிவாயலுக்கு தாக்குதல் நடாத்தும் போது வெளிவராத ஹக்கீம், இப்;போது ஏன் அதனைப் பற்றி பெரிதாக கதைக்கின்றார். அறிக்கை விடுக்கின்றார். எல்லாம் தேர்தல் முடியும் வரைதான். 
இந்தத் தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிராக முஸ்லிம்களது வாக்குகள் குறையும் போது அரசாங்கம் சிந்திக்கும். ஞானசார தேரரின் வாயை அரசாங்கம் மூடிவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  (மு) 

0 comments:

Post a Comment