கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஊடகவியலாளர் தாக்குதல் - கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் நேற்று  பொதுச் சந்தையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதோடு அவரது வீடியோ கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த 2013 ம் ஆண்டிற்கான மின் கட்டணம், வாடகைப் பணம், வரிப் பணம் ஆகியவற்றை செலுத்தாத 30 வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உத்தரவிட்டிருந்தார் என கரைச்சி பிரதேச சபை செயலாளர் ந.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
இதனையடுத்து, இன்று புதன்கிழமை வர்த்தகர்களுக்கும் பிரதேச சபை நிர்வாகத்தினருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்ற செய்தியாளரை பிரதேச சபை பணியாளர் ஒருவர் தாக்கியுள்ளார் என பொலிஸார் கூறினர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment