கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

திடீரென தீப்பற்றி எரிந்த யாழ்- கொழும்பு தனியார் பஸ்: மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளது.
இச்சம்பவம் கனகராயன்குளத்துக்கும் புளியங்குளத்துக்கும் இடையில் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கனகராயன்குளப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ்ஸின் குளிரூட்டி அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீக் கசிவினாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிக்கப்படுகிறது.
பஸ்ஸில் ஏற்பட்ட தீக்கசிவினைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக பஸ்ஸில் இருந்து இறக்கப்பட்டமையால் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
எனினும் பயணிகளின் உடைமைகள் எரிந்துள்ளதாகவும், கனகராயன்குளப் பொலிஸார் நீரை ஊற்றி தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.
பஸ்ஸில் பயணம் செய்த 50 பயணிகளும் வேறொரு பஸ்ஸில் யாழ்ப்பாணம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

0 comments:

Post a Comment